ஓரினச் சேர்க்கை மோகம்… உல்லாசமாக இருப்பதற்காக சிறுமியை கடத்திய இளம்பெண்!  

 

ஓரினச் சேர்க்கை மோகம்… உல்லாசமாக இருப்பதற்காக சிறுமியை கடத்திய இளம்பெண்!  

காரைக்காலை அடுத்துள்ள கோட்டுச் சேரியை சேர்ந்தவர் ஜோதி என்பவரது மனைவி கலைஅமுது (22). இவர் பிள்ளைத்தெருவாசல் கிராமத்தை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவியை கடந்த 2ம் தேதியன்று கடத்திச் சென்றதாக சிறுமியின் தாய் ராணி காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காரைக்காலை அடுத்துள்ள கோட்டுச் சேரியை சேர்ந்தவர் ஜோதி என்பவரது மனைவி கலைஅமுது (22). இவர் பிள்ளைத்தெருவாசல் கிராமத்தை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவியை கடந்த 2ம் தேதியன்று கடத்திச் சென்றதாக சிறுமியின் தாய் ராணி காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கலைஅமுது அந்த சிறுமியுடன் காணாமல் போனது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து கலைஅமுதுவின் செல்போன் எண்ணை போலீசார் ட்ராக் செய்தபோது அவர் சென்னை திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் என்னும் ஊரில் தங்கியிருப்பது தெரிய வந்தது. க்ரைம் போலீசார் அங்கு விரைந்து கலைஅமுதுவை கைது செய்து அவரிடமிருந்து சிறுமியை மீட்டு இருவரையும் காரைக்கால் கொண்டு வந்து விசாரணை செய்தனர். 

விசாரணையில் கலைஅமுது சிறுமியை கடத்திச் சென்று அவருடன் லெஸ்பியன் உறவு கொண்டது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இது தொடர்பாக சிறுமியை கடத்திச் சென்று லெஸ்பியன் உறவு கொண்ட கலைஅமுது (22) மற்றும் சிறுமியை காரில் கடத்திச் செல்ல உடந்தையாக இருந்த கோட்டுச்சேரியை சேர்ந்த முனுசாமி மகன் சுரேஷ் (26) ஆகிய இருவரையும் “போக்சோ” சட்டத்தின் கீழ் கைது செய்து இருவரையும் காரைக்கால் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். 

இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க சிறப்பு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து சுரேஷ் காரைக்கால் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். கலை அமுது புதுச்சேரி காலாப்பட்டு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.