ஓரினச் சேர்க்கைக்கு வர மறுத்ததால் ஆணின் பிறப்புறுப்பை துண்டித்த மர்ம ஆசாமி: ரெட்டேரியில் தொடரும் பயங்கரம்!?
மேம்பாலத்தின் கீழ் படுத்திருந்த ஒருவரின் பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: மேம்பாலத்தின் கீழ் படுத்திருந்த ஒருவரின் பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூடங்குளத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவர் சென்னை மாதவரம் ரெட்டேரி மேம்பாலத்தின் கீழ் மதுபோதையில் நேற்று இரவு படுத்துத் தூங்கியுள்ளார். போதையிலிருந்த நாராயணனின் பிறப்புறுப்பை யாரோ துண்டித்துள்ளனர். இதையடுத்து அவருக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னை ஓரினச் சேர்க்கைக்கு ஒருவர் அழைத்தார் என்றும் அதற்குத் தான் மறுப்பு தெரிவித்ததால் பிறப்புறுப்பைத் துண்டித்தார் என்றும் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே போல் மாதவரம் இரட்டை ஏரி மேம்பாலத்தின் கீழ் படுத்திருந்த கொளத்தூரைச் சேர்ந்த அஸ்லம்பாஷா என்பவரின் பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டது. இது குறித்துக் கூறிய அவர், குடும்ப தகராறு காரணமாகத் தானே இப்படிச் செய்து கொண்டதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தற்கொலை வழக்காக போலீசார் பதிவு செய்திருந்தனர்.
தற்போது மீண்டும் இதே போன்று ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் இது குறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.