ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த 10 வயது சிறுவனை கொடூரமாக தாக்கி எரித்த இளைஞன் ! உடன் பழகிய இளைஞனே செய்த செயலால் பெற்றோர் அதிர்ச்சி !!

 

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த 10 வயது சிறுவனை கொடூரமாக தாக்கி எரித்த இளைஞன் ! உடன் பழகிய இளைஞனே செய்த செயலால் பெற்றோர் அதிர்ச்சி !!

உத்தரபிரதேச மாநிலம் பிரயக்ராஜ் அருகே கரேலி காவல்நிலைய எல்லைக்குள் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. ஐனுதின்பூர் அருகே கடந்த புதன்கிழமை 22 வயது இளைஞனான சல்மான் என்பவன் 10 வயது சிறுவனை ஓரின சேர்க்கைக் அழைத்துள்ளான் அந்த சிறுவன் மறுக்கவே கொடுமைப்படுத்தி தீ வைத்து எரித்துள்ளான்.

உத்தரபிரதேச மாநிலத்தில் ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த 10 வயது சிறுவனை 22 வயது இளைஞர் கொடூரமாக தாக்கி எரித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் பிரயக்ராஜ் அருகே கரேலி காவல்நிலைய எல்லைக்குள் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. ஐனுதின்பூர் அருகே கடந்த புதன்கிழமை 22 வயது இளைஞனான சல்மான் என்பவன் 10 வயது சிறுவனை ஓரின சேர்க்கைக் அழைத்துள்ளான் அந்த சிறுவன் மறுக்கவே கொடுமைப்படுத்தி தீ வைத்து எரித்துள்ளான்.

இந்த சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் ஏ.கே.சிங் கூறுகையில், கரேலியில் வசிக்கும் சல்மான் என்பவன் கடந்த புதன்கிழமையன்று 10 வயது சிறுவனை விளையாடுவதற்காக அழைத்துள்ளான். பின்னர் அந்த சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்துள்ளான். உள்ளான். இதனால் பயந்து போன அந்த சிறுவன் மறுத்துள்ளான். இதை அடுத்து அந்த சிறுவனை அந்த இளைஞன் தாக்கி உள்ளான். இதனால் பயந்துபோன சிறுவன் தன்னை காப்பாற்றுமாறு அருகில் உள்ளவர்களுக்கு கேட்க கத்தி உள்ளான். 

boy-abuse-78.jpg

ஆனால் அந்த இளைஞன் சிறுவனை கழுத்தை நெரித்துள்ளான். இதனால் 10 வயது சிறுவன் மயங்கி விழுந்துவிட்டான். அவன் இறந்துவிட்டதாக நினைத்த சல்மான் அவன் உடலை எரித்துவிட நினைத்தான். பின்னர் சிறுவனை தூக்கிக்கொண்டு போய் ஒரு புதரில் போட்டு கொளுத்தியுள்ளான். பின்னர் அங்கிருந்து தப்பிவிட்டான்.
ஆனால் உயிரோடு இருந்த அந்த சிறுவன் நெருப்பின் சூடு தாங்காமல் கத்தியுள்ளான். உடனே அக்கம் பக்கத்தினர் வந்து சிறுவனை மீட்டுள்ளனர். பின்னர் காவல்துறைக்கு தகவல் அளிக்க, விரைந்து வந்த போலீசார் சிறுவனை மருத்தவமனையில் அனுமதித்தனர். இந்த குற்றம் தொடர்பாக வழக்குப் பதிந்த காவல்துறை குற்றவாளியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 
இதேபோல் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில், ஹைதராபாத்தின் தபீர்புரா வட்டாரத்தில் 9 வயது சிறுவன். 62 வயது செக்ரியூட்டியால் பல வாரங்களாக ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளான். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் குற்றவாளிக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.