ஓரம்கட்டப்படும் ஓ.பி.எஸ்… டி.டி.வி.தினகரன் அணிக்கு கொத்துக் கொத்தாய் தாவும் அதிமுக நிர்வாகிகள்..!

 

ஓரம்கட்டப்படும் ஓ.பி.எஸ்… டி.டி.வி.தினகரன் அணிக்கு கொத்துக் கொத்தாய் தாவும் அதிமுக நிர்வாகிகள்..!

இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அதிருப்தியாளர்கள் சற்று ஒதுங்கியும், கடமைக்கும் பங்கேற்கின்றர். மேலும் சிலர் மே 23ஆம் தேதிக்கு பிறகு தேர்தல் முடிவை பொறுத்து திமுக மற்றும் டி.டி.வி.தினகரன் கட்சிக்கு செல்லத் தயாராகி வருகின்றனர்’’ எனக் கூறுகிறார்கள்.

4 தொகுதி இடைத் தேர்தல் பணிகளில் எதிர்கட்சிகள் பம்பரமாய் சுழன்று வருகின்றனர்.  அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற தகவல் எடப்பாடி பழனிசாமியை கதிகலங்க வைத்துள்ளது.  ops

இது குறித்து அதிமுக நிர்வாகிகள், ’’ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த போது அவருக்கு ஆதரவாக வந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் மறுக்கப்பட்டதே உட்கட்சி பூசலுக்குக் காரணம். இதில் ஓபிஎஸ் பிரிந்து வந்த போது அவருக்கு ஆதரவாக வந்த கோபாலகிருஷ்ணனுக்கும், முத்துராமலிங்கதுக்கும் சீட் கிடைக்கும் என்ற நிலையில் ராஜன் செல்லப்பாவின் ஆதரவாளர்களுக்கு சீட் வழங்கியதில் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ops

ஒரு மாவட்ட செயலாளர் அவருக்கு வேண்டியவர்களுக்கு சீட் வாங்கி தருகிறார். ஓ.பி.எஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தும் அவரது ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கி தர முடியவில்லை என்கிற ஆதங்கம் பலருக்கும் உள்ளது.ops

 இன்னும் சிலர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகனுக்கு எம்பி ‘சீட்’ வாங்குவதில் காட்டிய ஆர்வத்தை தங்களுக்கு சீட் பெற காட்டவில்லை என்றும் கருதுகின்றனர். இதனால் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அதிருப்தியாளர்கள் சற்று ஒதுங்கியும், கடமைக்கும் பங்கேற்கின்றர்.  மேலும் சிலர் மே 23ஆம் தேதிக்கு பிறகு தேர்தல் முடிவை பொறுத்து திமுக மற்றும் டி.டி.வி.தினகரன் கட்சிக்கு செல்லத் தயாராகி வருகின்றனர்’’ எனக் கூறுகிறார்கள்.