ஓபிஎஸ் – தினகரனுக்கு இடையே நடப்பது பங்காளி சண்டை : பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்!

 

ஓபிஎஸ் – தினகரனுக்கு இடையே நடப்பது பங்காளி சண்டை : பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்!

ஓபிஎஸ் – தினகரனுக்கு இடையே நடப்பது பங்காளி சண்டை என்று மத்திய ஆணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

கன்னியாகுமரி: ஓபிஎஸ் – தினகரனுக்கு இடையே நடப்பது பங்காளி சண்டை என்று மத்திய ஆணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

ponar

இந்நிலையில் கன்னியாகுமரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சபரிமலை விவகாரத்தால்  கேரளா – தமிழகம் இடையே உள்ள உறவில் எந்த பாதிப்பும் இருக்காது. சொல்லப்போனால் முன்பை விட இனிமேல் தான் நல்ல பரஸ்பரம் நிலவப் போகிறது. ஆனால் ஒரு ஐயப்ப பக்தனாக சபரிமலைக்குத்   தீங்கு நடந்தால் அதை  என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

இதையடுத்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தன்னைச் சந்தித்ததாக டிடிவி தினகரன் கூறியிருப்பது குறித்து கருத்து தெரிவித்த அவர்,  ‘ஓபிஎஸ் – தினகரனுக்கு இடையே நடப்பது பங்காளி சண்டை, இந்தப் பங்காளி சண்டைக்கும் பாஜகவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை ‘என்று குறிப்பிட்டுள்ளார்.