ஓபிஎஸ் கார் டிரைவரின் மகள் தற்கொலை: அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

ஓபிஎஸ் கார் டிரைவரின் மகள் தற்கொலை: அதிர்ச்சி தரும்  சம்பவம்!

நிவேதிதா 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் இன்று திடீரென்று   தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கார் ஓட்டுநர்  மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ops

துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான  ஓ.பன்னீர்செல்வத்தின் கார் ஓட்டுநர் பாஸ்கர். இவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொதுப்பணித்துறை ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வருகிறார். இருவருக்கு நிவேதிதா என்ற மகள் உள்ளார். நிவேதிதா 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் இன்று திடீரென்று   தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சைதாப்பேட்டை போலீசார், நிவேதிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நிவேதிதாவின்  தற்கொலைக்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர். 

suicide

முன்னதாக ஓபிஎஸ் உதவியாளராக இருந்த மதன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.