ஓட்டு பூத்தில் பாட்டியிடம் அடி வாங்கிய விஜய்… தலையில் தாக்கப்பட்ட அஜித்… அதிரவைக்கும்  வீடியோ..!

 

ஓட்டு பூத்தில் பாட்டியிடம் அடி வாங்கிய விஜய்… தலையில் தாக்கப்பட்ட அஜித்… அதிரவைக்கும்  வீடியோ..!

கடந்த 18ம் தேதி திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவட்டிக்கு ஜனநாயகக் கடமையாற்ற தனது மனைவி ஷாலினியுடன் காலை 7 மணிக்கே கிளம்பினார் அஜித். எப்ப்போதும் வரிசையில் நின்று வாக்களிப்பதை கடமையாக கொண்டிருக்கும் அஜித்திற்கு இந்த தேர்தலில் அது வாய்க்கவில்லை.

வாக்குச்சாவடியில் ஓட்டுப்போடும்போது அஜித்தை ஒருவர் தலையில் தாக்கியதாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

கடந்த 18ம் தேதி திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவட்டிக்கு ஜனநாயகக் கடமையாற்ற தனது மனைவி ஷாலினியுடன் காலை 7 மணிக்கே கிளம்பினார் அஜித். எப்ப்போதும் வரிசையில் நின்று வாக்களிப்பதை கடமையாக கொண்டிருக்கும் அஜித்திற்கு இந்த தேர்தலில் அது வாய்க்கவில்லை. கட்டுக்கடங்காத கூட்டம் அஜித்தை பார்க்க கிளம்பியதால் அஜித்தும், ஷாலினியும் திணற, வேறு வழியின்றி பாதுகாப்புடன் கூட்ட நெரிசலை கடந்து வாக்களித்தனர். 

திரும்பி வரும்போதும் பெருத்த சிரமத்திற்கு இடையே தனது காரை வந்தடைந்த அஜித் பலமுறை மன்னிப்புக் கேட்டபடியே வீட்டை சென்றடைந்தார்.  இது நடந்து இரு தினங்களை கடந்தபின் வாக்குச்சாவடிக்குள் அஜித்தை ஒருவர் தலையில் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை வைத்து விஜய் ரசிகர்கள் #ஓட்டுபூத்துக்குள்செமகாட்டு என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்ரெண்டாக்கினர்.

அதில் விஜய் வரிசையில் நின்று வாக்களிப்பதையும், அஜித் கூட்டத்தை தாண்டி வாக்களிக்கும் புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டு கருத்து தெரிவித்து வந்தனர். 

இத்தனையும்  நடந்தபிறகு கோதாவில் குதிக்காமல் இருப்பார்களா தல ரசிகர்கள்? 

பதிலுக்கு #ஓட்டுப்பூத்தில்பாட்டிகிட்ட செமஅடி என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி விஜய் வாக்குச்சாவடிக்குள் பாட்டியிடம் அடிவாங்கியதாக புகைப்படங்களை இணைத்து ட்ரெண்டாக்கி வருகிறனர்.  

இந்த இரு ஹேஷ்டாக்குகளும் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அஜித்- விஜய் ரசிகர்கள் கமெண்டுகளால் முட்டி மோதி ட்விட்டர் கலவரத்தை ஆரம்பித்து உள்ளனர். இந்தக் கலவரம் தேர்தல் ரிசல்ட் வரை தொடரும் என்றே கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஆனால் இந்த மோதலில் இருவருக்கும் தோல்வியே மிஞ்சும் என சினிமா ஆர்வலர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

இதையும் வாசிக்க: ‘ரத்தவெறி கொண்டு ஆடுது பூமி’ : மருதநாயகம் பாடலை வெளியிட்ட கமல் ; எதற்காக தெரியுமா?