ஓட்டலில் 10% தள்ளுபடி வேணுமா? அப்படின்னா மறக்காம ஓட்டு போடுங்க !

 

ஓட்டலில் 10% தள்ளுபடி வேணுமா? அப்படின்னா மறக்காம ஓட்டு போடுங்க !

மக்களவை தேர்தலில் வாக்களிப்பவர்கள் ஓட்டல் பில்களில் 10% தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னை: மக்களவை தேர்தலில் வாக்களிப்பவர்கள் ஓட்டல் பில்களில் 10% தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மக்களவை தேர்தல்

ec

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. இதற்கான தேர்தல் பணிகளில் தமிழக கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதே சமயம்  அனைத்து குடிமக்களையும் வாக்களிக்க வைத்து, 100% வாக்குப்பதிவைப் பெற வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் மிகுந்த சிரத்தை எடுக்கும். இந்த முறையும் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை முன்வைத்து பல்வேறு தரப்பினரும் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். 

10% தள்ளுபடி

hotel

இந்நிலையில் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் 100% வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் வகையில், ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் மக்களவை தேர்தலில் வாக்களிப்பவர்கள் ஓட்டல் பில்களில் 10% தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த சலுகையானது பிரபல  ஓட்டல்களான, சரவணபவன், சங்கீதா, ஹாட் சிப்ஸ், வசந்த பவன் உள்ளிட்ட ஓட்டல்களில் வழங்கப்படவுள்ளது. இதில் சுமார் 10 ஆயிரம் ஓட்டல்களும், சென்னையில் 1000 ஓட்டல்களும் பங்கேற்கவுள்ளது 

விரலில்  மை

vote

மேலும் இந்த தொகையை விரலில் உள்ள மை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையைக்  காண்பித்து  மாலை 6 மணிக்கு பிறகும்  பெறலாம் பெறலாம் என்று அறிவுறுத்தியுள்ளது. 

இதையும் வாசிக்க: புதுத்துணி எடுத்துத் தராத கணவர்: குழந்தையின் கழுத்தை அறுத்து, தாய் தற்கொலை முயற்சி: அதிர்ச்சி தரும் சம்பவம்!