‘ஓட்டலில் தான் தினமும் சோறு…கெட்ட வார்த்தையால் திட்டினாள்’ மனைவியை கொன்ற கணவன் அளித்த பகீர் வாக்குமூலம்!

 

‘ஓட்டலில் தான் தினமும் சோறு…கெட்ட  வார்த்தையால் திட்டினாள்’ மனைவியை கொன்ற கணவன் அளித்த பகீர் வாக்குமூலம்!

சென்னை வேளச்சேரியில் உள்ள மாலில் செக்யூரிட்டியாக  பணிபுரிந்து வந்துள்ளார். 

சென்னை கிண்டி நேருநகர், பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் . இவரது மனைவி இலக்கியா. ஜெயராஜ் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில் இலக்கியா சென்னை வேளச்சேரியில் உள்ள மாலில் செக்யூரிட்டியாக  பணிபுரிந்து வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி இலக்கியா வீட்டில் பிணமாக தொங்கியுள்ளார். மனைவி  தற்கொலை செய்து கொண்டதாக அக்கம் பக்கத்தினரிடம் ஜெயராஜ் கூற இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கிண்டி போலீஸார்  இலக்கியாவின்  உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் இலக்கியா கழுத்து நெரித்து கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. 

ttn

இதையடுத்து கணவர் ஜெயக்குமாரை  போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். அப்போது ஜெயராஜ், என் காதல் மனைவியை எப்படி நான் கொலை செய்வேன் கடவுளே… என்று நாடகம் ஆடியுள்ளார். இதைக்கண்டு கடுப்பான போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் மனைவியைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். 

ttn

அதில், நானும் என் மனைவியும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். என் மனைவி வேலைக்கு  செல்வதால் லேட்டாக தான் வீட்டுக்கு வருவார். அதனால் ஓட்டலில் வாங்கி சாப்பிடுவோம். என் மனைவி விடுமுறையில் வீட்டிலிருந்தால் சமைப்பாள். ஆனால்  அது எனக்கு பிடிக்காது. இதனால் திருவண்ணாமலையிலிருந்து என் அம்மாவை அழைத்து வரலாம் என்றேன். அதற்கு அவள் சம்மதிக்கவில்லை. இது தொடர்பாகக் கடந்த 29ம் தேதி எங்களுக்குள் சண்டை வந்தது. அப்போது இலக்கியா, என் அம்மாவை அசிங்கமாகத் திட்டினார். அதனால்தான் அவரின் கழுத்தைப் பிடித்து நெரித்தேன். அவள் இறந்துவிட்டாள். அதை மறைக்கவே தற்கொலை நாடகம் நடத்தினேன்’ என்றார். இதை தொடர்ந்து மனைவியைக் கொன்ற குற்றத்தில் கைது செய்யப்பட்ட ஜெயராஜ், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.