ஓடும் ரயிலிலிருந்து இறங்க முயன்ற இளம்பெண்ணின் கால்கள் துண்டானது!

 

ஓடும் ரயிலிலிருந்து இறங்க முயன்ற இளம்பெண்ணின் கால்கள் துண்டானது!

விருதுநகர் ரயில் நிலையத்தில் ஒடும் ரயிலில் இறங்க முயன்ற ஆந்திராவைச் சேர்ந்த காவ்யா என்ற இளம் பெண் ரயிலில் சிக்கி இருகால்களை இழந்துள்ளார். 

விருதுநகர் ரயில் நிலையத்தில் ஒடும் ரயிலில் இறங்க முயன்ற ஆந்திராவைச் சேர்ந்த காவ்யா என்ற இளம் பெண் ரயிலில் சிக்கி இருகால்களை இழந்துள்ளார். 

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் ரங்கசாமி, இவரது மகள் காவ்யா.. தற்போது குடும்பத்துடன் செங்கோட்டையில் வசித்துவருகிறார். இந்நிலையில் மும்பையிலிருந்து நெல்லை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த காவ்யா ரயிலில் பயணித்து வந்த நிலையில் விருதுநகர் ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும் முன்னரே இறங்க முயற்சி செய்துள்ளார். அப்போது  ரயிலிலிருந்து தடுமாறி தண்டவாளத்தில் சிக்கி இரண்டு கால்களையும் இழந்துள்ளார். அவருக்கு 

விருதுநகர் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்குறித்து விருதுநகர் ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.