ஓடும் பேருந்தில் திடீரென பற்றிய தீ.. முன்கூட்டியே அறிந்து பயணிகளை காப்பாற்றிய டிரைவர்!

 

ஓடும் பேருந்தில் திடீரென பற்றிய தீ.. முன்கூட்டியே அறிந்து பயணிகளை காப்பாற்றிய டிரைவர்!

சேலம் அருகே உள்ள வேம்படிதளம் என்னும் பகுதியில் இருந்து அரசு பேருந்து ஒன்று சேலம் பழைய பேருந்து நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்துள்ளது.

சேலம் அருகே உள்ள வேம்படிதளம் என்னும் பகுதியில் இருந்து அரசு பேருந்து ஒன்று சேலம் பழைய பேருந்து நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்துள்ளது. அந்த பேருந்து கந்தம்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த பேருந்தின் அடியிலிருந்து கரும்புகை வந்துள்ளது. அதனைப் பார்த்த டிரைவர் செல்லும் வழியிலேயே பேருந்தை நிறுத்திவிட்டு பயணிகள் அனைவரையும் கீழே இறங்குமாறு கூறியுள்ளார். 

t

அதனால் பதற்றமடைந்த பயணிகளும் பேருந்தில் இருந்து கீழே இறங்கியுள்ளனர். பயணிகள் இறங்கிக் கொண்டிருந்த சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் பேருந்தில் இருந்த கண்ணாடிகள் வெடித்துச் சிதறியுள்ளன. டிரைவர் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததால்  இந்த விபத்தில் எந்த வித உயர் சேதமும் ஏற்படவில்லை. இதனையடுத்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 30 நிமிடம் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்துள்ளனர். பயணிகள் அனைவரும் மாற்றுப் பேருந்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.