‘ஓசியில குடிக்க வந்தா ஒரு குவார்ட்டரோட நிறுத்திக்கணும்…’ கிண்டல் செய்ததால் இளைஞரை பாட்டிலால் அடித்து கொன்ற நண்பர்கள்!

 

‘ஓசியில குடிக்க வந்தா ஒரு குவார்ட்டரோட நிறுத்திக்கணும்…’ கிண்டல் செய்ததால்  இளைஞரை பாட்டிலால் அடித்து கொன்ற நண்பர்கள்!

ஜெகனும் சரவணனும் பர்வதமலைக்கு போவதாகக் கூறி என்னிடம் செல்போனை கொடுத்து 1500 ரூபாய் ரெடி பண்ண கூறினார்கள். நானும் ரெடி பண்ணி குடுத்தேன். 

சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, தைலாவரம் டாஸ்மாக் கடையின் அருகே ஜெகன் என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த  விவகாரத்தில் கோவளம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் முதலில் சரணடைய, அவர் அளித்த தகவலின் படி ஜோசப் என்பவர் கைது செய்யப்பட்டார்.  இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘ஜெகனும் சரவணனும் நண்பர்கள். கடந்த 11-ந்தேதி இரவு கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் நின்று பேசி கொண்டிருந்தோம். அப்போது ஜெகனும் சரவணனும் பர்வதமலைக்கு போவதாகக் கூறி என்னிடம் செல்போனை கொடுத்து 1500 ரூபாய் ரெடி பண்ண கூறினார்கள். நானும் ரெடி பண்ணி குடுத்தேன். 

ttn

அதன் பிறகு நான் டாஸ்மாக் போகப்போறேன். 100 ரூபாய் இருந்தா கொடுங்க என்றேன். அதற்கு அவர்கள் நாங்களும் வருகிறோம் என்று வந்தார்கள். 3 பாட்டில்கள் வாங்கி  வந்து குடிக்க ஆரம்பித்தோம். அப்போது நான் அடுத்த பாட்டிலை எடுக்க சென்றேன். அதற்கு   ஜெகன், `ஓசியில குடிக்க வந்தா ஒரு குவார்ட்டரோட நிறுத்திக்கணும்… நீ ரெண்டு குவாட்டர் குடிக்கற? என கேட்டதோடு மட்டுமல்லாமல், என்னைப் பார்த்து, கட்டையா இருந்துகிட்டு இது பண்ற வேலையைப் பாரு என சொல்லி என்னை கிண்டல் செய்தான்’.  இதனால் நான் கோபத்தில் பீர் பாட்டிலை எடுத்து அவன் தலையில் ஓங்கி அடித்தேன்.

ttn

அப்போது சரவணனும், உதவி பண்ணவன இப்படி சொல்லலாமா என்று கேட்டு  பீர் பாட்டிலை எடுத்து அவனும் அடித்தான்.  அப்போது ஜெகன் சம்பவ இடத்திலேயே பலியானான்’ என்றார் . தற்போது இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.