ஒவ்வொரு முறை நீ சிரிக்கும்போதும் நான் மகிழ்கிறேன்: காதலன் பற்றி இலியானா – புகைப்படம் உள்ளே

 

ஒவ்வொரு முறை நீ சிரிக்கும்போதும் நான் மகிழ்கிறேன்: காதலன் பற்றி இலியானா – புகைப்படம் உள்ளே

ஆண்ட்ரியூ நீபோன் ஒரு சிறந்த புகைப்பட கலைஞர், அவரை காதலிப்பதாக இலியானா முன்பே அறிவித்துவிட்டார். காதல் அறிவிப்புக்கு பின் இருவரையும் பொது இடங்களில் அதிகமாக காண முடிகிறது.

இலியான தனது காதலர் ஆண்ட்ரியூ நீபோன் உடன் எடுத்துக்கொண்ட புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

‘கேடி’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இலியானா. தமிழில் பெரிதாக வரவேற்பு கிடைக்காத இலியானவின் மார்க்கெட், தெலுங்கு திரையுலகில் டாப்புக்கு சென்றது.

மகேஷ் பாபு, பிரபாஸ், ரவி தேஜா என தெலுங்கு திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் நடித்து உச்சத்துக்கு சென்றார். ரவி கிருஷ்ணாவின் கதாநாயகியாக அறிமுகமான இலியானவின் அடுத்த தமிழ் படமே விஜய் உடன் அமைந்தது. ‘நண்பன்’ படத்தில் சிறிது நேரமே வந்தாலும் அனைவர் மனதிலும் இடம்பிடித்தார்.

fv

‘நண்பன்’ படத்துக்கு பிறகு தொடர்ந்து தமிழில் நடிப்பார் என அவரது ரசிகர்கள் காத்திருக்க, பாலிவுட்டில் பிஸியானார் இலியானா. ரன்பீர் கபூருடன் ‘பர்ஃபி’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார், அதன்பிறகு தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் நடித்த ’பாகல்பன்ட்டி’ படம் வெளியாக தயாராக உள்ளது. இப்படி பிஸியான இலியானாவுக்கு வாழ்க்கை துணையாக வந்தவர்தான் ஆண்ட்ரியூ நீபோன்.

aasdsa

ஆண்ட்ரியூ நீபோன் ஒரு சிறந்த புகைப்பட கலைஞர், அவரை காதலிப்பதாக இலியானா முன்பே அறிவித்துவிட்டார். காதல் அறிவிப்புக்கு பின் இருவரையும் பொது இடங்களில் அதிகமாக காண முடிகிறது. ஆண்ட்ரியூ புகைப்படக் கலைஞர் என்பதால், இலியாவின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் வண்ணமயமாக இருக்கிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

You make me happy every time you smile ~ @raammie ♥️♥️♥️ ? @jeromecole

A post shared by Ileana D’Cruz (@ileana_official) on

சமீபத்தில்  இலியானா, இந்த புகைப்படத்தை பதிவு செய்து ஒவ்வொரு முறை நீ சிரிக்கும்போதும் நான் மகிழ்கிறேன் என கேப்சன் வைத்திருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.