ஒவ்வொருவருக்கும் 10 லிட்டர் பிராந்தி; சுயேட்சை வேட்பாளர் பகீர் வாக்குறுதிகள்
திருப்பூர் சுயேட்சை வேட்பாளர் சேக் தாவூத், தன்னை வெற்றிபெற வைத்தால் வீட்டுக்கு 10 லிட்டர் பிராந்தி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
திருப்பூர் சுயேட்சை வேட்பாளர் சேக் தாவூத், தன்னை வெற்றிபெற வைத்தால் வீட்டுக்கு 10 லிட்டர் பிராந்தி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர் அந்தியூரை சேர்ந்த சேக் தாவூத். இவர் டெய்லரிங் தொழில் செய்து வருகிறார். வேட்புமனு தாக்கல் செய்த சேக் தாவூத்தின் வாக்குறுதிகளை கேட்டால் சிரிப்பதா அழுவதா என்றே தெரியாது. அவருடைய ஒவ்வொரு வாக்குறுதிகளும் ஒவ்வொரு ரகம்!
அனைவரும் மருந்துக்காக சாப்பிடக் கூடிய ஒரிஜினல் பிராந்தியை பாண்டிச்சேரியில் இருந்து இறக்குமதி செய்து வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் 10 லிட்டர் வழங்குவேன்.
மேட்டூர் அணையில் இருந்து நேராக வாய்க்கால் வெட்டி திருப்பூருக்கு தண்ணீர் கொண்டு வருவேன் என வாக்குறுதி அளித்திருக்கிறார். இவர் அளித்துள்ள பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் வாசிங்க
அன்புமணி மீது இத்தனை வழக்குகளா? வேட்புமனு தாக்கலின் போது வெளியான உண்மை!?