ஒலியும் ஒளியும் கொரோனாவை ஒழிக்காது! – ப.சிதம்பரம் வேதனை

 

ஒலியும் ஒளியும் கொரோனாவை ஒழிக்காது! – ப.சிதம்பரம் வேதனை

ஒலியும் ஒளியும் கொரோனா தொற்றை ஒழிக்காது, ஊரடங்கு அதனுடன் கூடுதல் சோதனைதான் நல்ல பலனைத் தரும் என்று ப.சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

“பிரதமர் அறிவுரையை ஏற்று ஊரடங்கைக் கடைப்பிடிக்கிறோம், ஒலி எழுப்பினோம், இன்று ஒளி ஏற்றுவோம். ஒலியும் ஒளியும் மட்டுமே கொரொனா தொற்றை ஒழிக்க முடியாது என்று விஞ்ஞானம் கூறுகிறது.

ஊரடங்கு மட்டும் போதாது, மிக அதிகமாக மிகப் பரவலாக சோதனை (Testing) செய்யவேண்டும் என்று மற்ற நாடுகளிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்.

ஊரடங்கு + கூடுதல் சோதனை தாம் நல்ல விளைவுகளைத் தரும் என்று ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் நமக்கு அறிவுறுத்துகின்றன” என்று கூறியுள்ளார்.