ஒரே வாரத்தில் உங்களை கலராக்கும் கடுகு எண்ணெய்!!!

 

ஒரே வாரத்தில் உங்களை கலராக்கும் கடுகு எண்ணெய்!!!

கடுகு எண்ணெய்க்குள் ஏராளமான அழகு ரகசியங்கள் ஒளிந்து கிடக்கின்றன என்பது தெரியுமா? ஆம் தலைமுடியையும் சருமத்தையும் பொலிவாக மாற்றக்கூடிய சீக்ரெட் கடுகு எண்ணெய்க்குள் ஒளிந்து கிடக்கிறது

கடுகும் அதிலிருந்து தயாரிக்கப்படும் கடுகு எண்ணெயும் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்துவது எனவும் இதயத்தை பலப்படுத்த உதவும் என்று மட்டுமே நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் கடுகு எண்ணெய்க்குள் ஏராளமான அழகு ரகசியங்கள் ஒளிந்து கிடக்கின்றன என்பது தெரியுமா? ஆம் தலைமுடியையும் சருமத்தையும் பொலிவாக மாற்றக்கூடிய சீக்ரெட் கடுகு எண்ணெய்க்குள் ஒளிந்து கிடக்கிறது.

சருமத்துக்கு கடுகு எண்ணெய் ரசாயனங்கள் கலக்காத இயற்கையான சன் ஸ்கிரீனாகப் பயன்படுகிறது. சருமத்தின் நிறத்தை மெருகூட்டுவதோடு, கரும்புள்ளிகளையும் நீக்கும்.

கடுகு எண்ணெயையும் அதே சம அளவில் தேங்காய் எண்ணெயையும் கலந்து, உடல் மற்றும் முகத்தில் தடவி, நன்கு மசாஜ் செய்து குளித்துவர சருமம் மென்மையாகவும் பளபளப்புடனும் திகழும்.

தினமும் காலையில் குளிக்கச் செல்வதற்கு பத்து நிமிடம் முன்பாகவும் இரவில் தூங்குவதற்கு முன்பும் உதட்டில் கடுகு எண்ணெயை அப்ளை செய்து வந்தால், உதடுகளின் நிறம் மேம்படுவதோடு, மிக மென்மையாகவும் மாறிவிடும்.

சருமத்துக்கு இயற்கையான கிளன்சராக கடுகு எண்ணெய் பயன்படுகிறது. கடுகு எண்ணெயை இரவு தூங்கும் போது தலையி் தேய்த்து, முடியின் வேர்க்கால்களில் இறங்கும்படி தேய்த்து மசாஜ் செய்து வரவேண்டும். கடுகு எண்ணெய் தலைமுடியின் வேர்க்கால்களுக்குள் சென்று, முடியின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. கடுகு எண்ணெயைத் தொடர்ந்து தலைமுடிக்கு தேய்த்து வந்தால் இளநரையைத் தடுக்க முடியும். முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தும்

கடுகு எண்ணெயை சம அளவு தேங்காய் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தி வர, தலைமுடி நீண்டு அடர்த்தியாக வளரும். தலைமுடிக்கும் சருமத்துக்கும் மட்டுமல்லாது பற்களையும் பளிச்சென சுத்தமாக வைத்திருக்கவும் கடுகு எண்ணெயைப் பயன்படுத்த முடியும். 

பல் தேய்த்து முடித்தவுடன் சிறிது கடுகு எண்ணெய், நான்கு துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் கொஞ்சம் உப்பு சேர்த்து, வாயில் ஊற்றி இரண்டு நிமிடங்கள் வரை வைத்திருந்து, வாய் கொப்பளிக்க வேண்டும். அப்படி தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் பற்கள் பளிச்சென மின்னும். பற்களில் ஏதேனும் கறைகள் இருந்தால் நீங்கும்.

அதேபோல் காலையில் பல் துலக்குவதற்கு முன்பாக, கொஞ்சம் கடுகு எண்ணெயை வாயில் ஊற்றி, சிறது நேரம் வைத்திருந்து கொப்பளித்தால், பற்களில் உண்டாகும் நோய் தொற்று, ஈறுகளில் உண்டாகும் வீக்கம், ரத்தம் கசிதல் ஆகியவை சரியாகும்.