ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக அப்பல்லோ ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் துரை முருகன்…

 

ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக அப்பல்லோ ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் துரை முருகன்…

நெஞ்சு வலியால் துடிக்கவே இரவோடு இரவாக அப்பல்லோவின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் கடந்த சில நாட்களாகவே சிறுநீரக தொற்று காரணமாக அவதிப்பட்டு  வந்தார். இந்நிலையில் அவருக்கு  காய்ச்சல் மிகவும் அதிகமானதால் நேற்று நள்ளிரவு 2 மணிக்கு சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

durai

வேலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தனது இல்லம் மற்றும் அலுவலகங்களில் நடந்த ரெய்டுகளால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான துரைமுருகன்,தேர்தல் ரத்து என்று அறிவிக்கப்பட்டவுடன் நிலை குலைந்தார்.மற்ற தொகுதிகளை விட்டுவிட்டு தனது மகன் போட்டியிடும் தொகுதியில் மட்டும் தனி கவனம் செலுத்தி பழி வாங்குவதாக அதிமுக, பாஜ கட்சிகள் மீது பாய்ந்தார்.

duraimurugan

இதை ஒட்டி அடுத்தடுத்து உடல்நிலை சுணக்கமடைய அவர் இருமுறை இதே அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் அவர் நெஞ்சு வலியால் துடிக்கவே இரவோடு இரவாக அப்பல்லோவின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.