ஒரே போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்த “மூன்று காதல் ஜோடிகள்”… உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு!

 

ஒரே போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்த “மூன்று காதல் ஜோடிகள்”… உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு!

இப்போதெல்லாம் பெற்றோர்கள் திருமணத்திற்குச் சம்மதிக்காவிட்டால் காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கின்றனர்.

இப்போதெல்லாம் பெற்றோர்கள் திருமணத்திற்குச் சம்மதிக்காவிட்டால் காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கின்றனர். இது வாடிக்கையாகி விட்டது. ஜாதி, மத வேறுபாட்டால் வீட்டை எதிர்த்துச் செய்து கொள்ளும் அந்த காதலர்கள் கடைசியில் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுகின்றனர். இவ்வாறு நடந்து வருகையில் ஒரே நாளில் மூன்று காதலர்கள் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. 

ttn

ஈரோடு மாவட்டம் ஊராட்சிக்கோட்டை என்னும் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவரும் அமராவதி என்ற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக உயிருக்கு உயிராகக் காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்ள இவர்கள் வீட்டில் சம்மதம் கேட்ட நிலையில் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால் வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள் திருப்பூர் விநாயகர் கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதனையடுத்து, தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு பவானி மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

ttn

இவர்களைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பூபாளன் – சிந்து பிரியா என்னும் ஜோடியும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த  மகேஷ்- கார்த்திகா என்னும் ஜோடியும் பாதுகாப்பு கேட்டு அதே காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளனர். இந்த காதல் ஜோடிகளைத் தேடிக் காவல் நிலையத்திற்கு அவர்களின் பெற்றோர்கள் வந்ததால் அங்குச் சற்று பரபரப்பு நிலவியது. இதனையடுத்து போலீசார் அந்த 3 காதல் ஜோடிகளின் பெற்றோர்களையும் பேசி சமாதானம் படுத்தி அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளனர்.