ஒரே போன் காலில் 23 லட்சம் ரூபாயை இழந்த பஞ்சாப் முதல்வர் மனைவி!

 

ஒரே போன் காலில் 23 லட்சம் ரூபாயை இழந்த பஞ்சாப் முதல்வர் மனைவி!

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மனைவியின் வங்கி கணக்கிலிருந்து, 23 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே போன் காலில் 23 லட்சம் ரூபாயை இழந்த பஞ்சாப் முதல்வர் மனைவி!

புது டெல்லி: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மனைவியின் வங்கி கணக்கிலிருந்து, 23 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவியும்  பாட்டியாலா மக்களவைத் தொகுதி எம்.பியுமானவர் பிரனீத் கவுர். நாடாளுமன்ற கூட தொடருக்காக டெல்லியில் முகாமிட்டுள்ள இவருக்கு சில நாட்களுக்கு முன்னர் செல்பேசியில் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் தான் ஸ்டேட்பாங்க்கில்  இருந்து பேசுகிறேன். பழைய அரியர் பாக்கிக்காக உங்கள் கணக்கு விவரங்கள் பற்றி கூறுங்கள் என்று கேட்டுள்ளார். உடனே கொஞ்சமும் தாமதிக்காத பிரனீத் கவுர் கணக்கு எண், ஏடிஎம் அட்டை, அதன் பின் நம்பர் உள்ளிட்டவற்றைக் கூறியுள்ளார். இதையடுத்து அவர் நாடாளுமன்றத்திற்கு அவசரமாகச் சென்றுவிட்டார். 

இதையடுத்து கடந்த மாதம் 29 ஆம் தேதி அவரின் வங்கி கணக்கிலிருந்து 23 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் குடும்பத்தினரிடம் இதுகுறித்து விசாரித்துள்ளார். அவர்கள் யாரும் இதுபற்றி தெரியவில்லை என்று கூறவே, தான் ஏமாற்றப்பட்டிருப்பது தெரிந்து உடனடியாக போலீசில் புகார் அளித்தார். 

இந்நிலையில், இது தொடர்பாக ஆன்லைன் திருட்டுக் கும்பலில்  முக்கியமான  அன்சாரி என்பவரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாநில முதல்வரின் மனைவியும், எம்.பி.யுமான பிரனீத் கவுரே இதுபோன்ற மோசடியில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.