ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் பலி.. உலகளவில் பலி எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்தது!
இதனால் பல்வேறு நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 173 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனால் பல்வேறு நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோயில்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பூங்காக்களை வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி மூடவைக்கக்கோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 4லட்சத்து17 ஆயிரத்து 663 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்தது. இதுவரை 18,605 பேர் பலியாகி உள்ளனர் . ஒரே நாளில் உலகளவில் சுமார் 2 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.