ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் பலி.. உலகளவில் பலி எண்ணிக்கை 24ஆயிரத்தை கடந்தது!

 

ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் பலி.. உலகளவில் பலி எண்ணிக்கை 24ஆயிரத்தை கடந்தது!

இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது  199  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

இதனால்  பல்வேறு நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.  பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் கோயில்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பூங்காக்களை  வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி மூடவைக்கக்கோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

 

இதுவரை உலகம் முழுவதும் 4லட்சத்து17 ஆயிரத்து 663   பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர்  எண்ணிக்கை 22 ஆயிரமாக இருந்த நிலையில், இன்று 24 ஆயிரமாக அதிகரித்துள்ளது.  இதுவரை 24,065  பேர் பலியாகி  உள்ளனர் .   ஒரே நாளில் உலகளவில் சுமார் 2 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.