ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை

 

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை

ரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுதியிருக்கிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாஸ்குமார்(19), கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த கவிதா(19) இருவரும் ஆத்துக்காட்டு கோட்டையில் அரசு கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தனர். இருவவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், நண்பர்களாக பழகியவரை பிரச்சனை எதுவுமில்லை. அதுவே காதலர்களாக பழகி வந்தபோதுதான் இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனம் உடைந்து, தற்கொலை முடிவுக்கு வந்தனர் இருவரும்.

கள்ளக்குறிச்சி அருகே ஏரியூர் அருஞ்சோலை அம்மன் கோவிலில் திருமண்ம் செய்துகொண்டனர். பின்னர் கோவில் முன்பாகவே ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். கீழ்குப்பம் போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இளம்ஜோடிதற்கொலை சம்பவத்தினால் அதிர்ந்து போயிருக்கிறார்கள் அப்பகுதியினர்.