ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை: இறுதி சடங்கிற்கு பணம் கொடுத்துவிட்டு தூக்கிட்டு கொண்ட துயரம்!

 

ஒரே குடும்பத்தை  சேர்ந்த மூவர் தற்கொலை: இறுதி சடங்கிற்கு பணம் கொடுத்துவிட்டு தூக்கிட்டு கொண்ட துயரம்!

இறுதிச் சடங்கிற்குப் பணம் கொடுத்துவிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர்: இறுதிச் சடங்கிற்குப் பணம் கொடுத்துவிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் சின்னகாளி பாளையத்தைச் சேர்ந்தவர் துரைராஜ். இவருக்கு கோபால கிருஷ்ணன் என்ற மகனும், செல்வி, சாந்தி என்ற இரு மகள்களும் உள்ளனர். செல்வி தனது கணவரை இழந்த நிலையில் அவர் தனது தந்தை வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.  இளையமகள் சாந்தி இடுக்குவாய் கிராமத்தில் கணவருடன் வசித்து வந்துள்ளார். 

suicide

இந்நிலையில் நேற்று திடீரென தங்கை சாந்தியின் வீட்டிற்குச் சென்ற கோபால கிருஷ்ணன், அவரிடம் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். சாந்தி காரணம் கேட்டதற்கு, அவசர செலவு வந்தால் பயன்படுத்திக்கொள் என்று கூறியுள்ளார். அண்ணன் தருகிறார் என்று சாந்தியும் வாங்கி வைத்து கொண்டார்.  மறுநாள் காலை வெகுநேரமாகியும்,  கோபால கிருஷ்ணனின் வீட்டின் கதவு திறக்கப்படாததால்,  சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது துரைராஜ், கோபால கிருஷ்ணன் மற்றும்  செல்வி ஆகியோர் தூக்கில்  பிணமாகத் தொங்கியுள்ளனர். 

murder

இதுகுறித்து தகவலறிந்து வந்த இளையமகள்  செல்வி மொத்த குடும்பமும்  சடலமாகக் கிடப்பதைப் பார்த்துக் கதறி அழுதுள்ளார். சொந்த செலவில் இறுதிச் சடங்கு செய்யப் பணத்தைக் கொடுத்து விட்டு குடும்பமே தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.