ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…ஆதார் மற்றும் டைரியால் வெளிவந்த உண்மை!

 

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…ஆதார் மற்றும் டைரியால்  வெளிவந்த உண்மை!

உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது அங்கு ஆதார் மற்றும் டைரி ஒன்றும் கிடைத்தது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையம் அருகே 4 பேர் உடல் சிதறி இறந்து கிடந்தனர்.  இதுகுறித்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  ரயில்வே போலீசார் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது அங்கு ஆதார் மற்றும் டைரி ஒன்றும் கிடைத்தது.

ttn

அதன்படி இறந்தவர்கள் திருச்சி மாவட்டம் உறையூரைச் சேர்ந்த உத்தரபாரதி, சங்கீதா, அபினயஸீ, ஆகாஸ் என்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் என தெரியவந்துள்ளது.  அவர்களின் முகம் சிதைந்துள்ளதால் ஆதார் அட்டையில் உள்ளது அவர்கள் தானா  என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ttn

இதில் ஒருவரின் சட்டை பையில், திருச்சியிலிருந்து கொடைரோடு  வந்த  ரயில் மற்றும் பச டிக்கெட்டுகள் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.