ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை: அதிர்ச்சி தரும் கடிதம்?
கோவையில் ஒரே வீட்டில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் ஒரே வீட்டில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கருமத்தப்பட்டி அருகே கடந்த 6 மாதங்களாக வாடகை வீட்டில் வசித்து வருபவர் அந்தோணி. இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சோபனா என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் ஒரு மகளும் உள்ளனர். இதுதவிர அந்தோணியின் அம்மா புவனேஸ்வரி என 5 பேரும் ஒரே வீட்டில்தான் வசித்து வந்துள்ளனர்.
இதனிடையே நேற்று மாலை வரை அந்தோணி வீட்டில் இருந்து யாரும் வெளியே வராத நிலையில் இருந்துள்ளனர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அந்தோணியின் வீடு உள்ளே சென்ற பார்த்தபோது, அந்தோணி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். அந்தோணியின் மனைவியான சோபா, மற்றும் அவர்களின் இரு குழந்தைகள், அந்தோணியின் தாயான புவனேஸ்வரி ஆகிய 4 பேரும் விஷம் அருந்திய நிலையில் இறந்து கிடந்துள்ளனர். இதனால் பதற்றம் அடைந்த அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அந்தோணி எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில், 12 வருடம்தான் முதுகுவலியால் அவதிப்படுவதாகவும், தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தும் முதுகுவலி சரியாகவில்லை. எனவே தனியாக இறக்க விரும்பவில்லை, எங்கள் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.இதன்மூலம் அந்தோணி தூக்கில் தொங்குவதற்கு முன்பு, வீட்டில் உள்ள அனைவருக்கும் விஷம் வைத்தது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து 5 பேரின் உடல்களைக் கைப்பற்றியுள்ள போலீசார் தொடர் விசாரணையை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.