ஒரே ஒரு போன் கால்! ரூ.23 லட்சத்தை இழந்த பஞ்சாப் முதல்வரின் மனைவி….

 

ஒரே ஒரு போன் கால்! ரூ.23 லட்சத்தை இழந்த பஞ்சாப் முதல்வரின் மனைவி….

பஞ்சாப் முதல்வரின் மனைவியை ஒரே ஒரே போன் கால் மூலம் ஏமாற்றி அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.23 லட்சத்தை ஆட்டைய போட்ட மோசடி நபரை போலீசார் கைது செய்தனர்.

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.  முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவி பிரீனித் கவுர் பாட்டியாலா நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரீனித் கவுர் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் தங்கி இருந்தார். அப்போது அவரது மொபைலுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் தன்னை தேசிய வங்கியின் மேலாளர் என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு பிரீனித் கவுரிடம் பேசியுள்ளார்.

அமரீந்தர் சிங்

உங்களது சம்பளத்தை வங்கி கணக்கில் டெபாசிட்  செய்ய வேண்டும் அதற்காக வங்கி கணக்கு எண், சிவிசி எண், ஏ.டி.எம். பின் மற்றும் ஒன் டைம் பாஸ்வேர்டு உள்ளிட்டவை வேண்டும் என்று பிரீனித் கவுரிடமிருந்து நைசாகி பேசி அந்த தகவல்களை மர்மநபர் வாங்கியுள்ளார். அதற்கு அடுத்த சில நொடிகளில் அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.23 லட்சத்தை அந்த நபர் எடுத்து விட்டார்.  

மர்ம அழைப்பு

இதனையடுத்து பிரீனித் கவுரின் செல்போனுக்கு இது குறித்து எஸ்.எம்.எஸ். சென்றது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரீனித் கவுர் தான் ஏமாற்றம் பட்டதையடுத்து அறிந்தார். இதனையடுத்து இது தொடர்பாக அவர் போலீசில் புகார் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் மோசடி நபரின் மொபைல் நம்பரை டிரேஸ் செய்து ராஞ்சியில் இருப்பதை கண்டிபிடித்தனர். இதனையடுத்து ராஞ்சி சென்ற பஞ்சாப் போலீசார் மோசடி நபரை கைது செய்து பஞ்சாப்புக் கொண்டு சென்றனர்.