ஒரு வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை!

 

ஒரு வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை!

தன்னுடைய அத்தை மகள் சங்கரேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மவுனி கணேஷ் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. 

சாத்தூர் அருகிலுள்ள போத்திரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் மாரிக்கண்ணன்.  இவர் டிரைவராக பணியாற்றி வரும் நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னுடைய அத்தை மகள் சங்கரேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மவுனி கணேஷ் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. 

ff

திருமணம் ஆனதிலிருந்து  மாரிக்கண்ணனுக்கும் சங்கரேஸ்வரிக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  தற்போது ஊரடங்கு காரணமாக கணவன் மனைவிக்கு இடையே சண்டை அதிகமானது. இதனால் விரக்தியில் இருந்த மாரிக்கண்ணன்  தனது குழந்தைக்கு விஷம் கொடுத்து, தானும் அதே விஷத்தை அருந்தி தற்கொலை செய்துள்ளார்.

tt

இதுகுறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் மாரிக்கண்ணனையும், மவுனி கணேஷையும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த இருக்கன்குடி காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 

tt

குடும்ப தகராறில் தந்தையே தனது ஒரு வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.