ஒரு வயது குழந்தைக்கு கொரோனா: தந்தையின் மூலம் பரவியது கண்டுபிடிப்பு!
குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். கைக்குழந்தை என்பதால், அதன் தாயாரும் உடனிருக்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் 1075 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் யில் நேற்று புதிதாக ஒரு வயது குழந்தை உள்பட 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் தந்தைக்கு ஏற்கனவே கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் மூலமாக தான் குழந்தைக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் மருத்துவர்கள் தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். கைக்குழந்தை என்பதால், அதன் தாயாரும் உடனிருக்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.