ஒரு வயதுக் குழந்தையைக் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தூக்கில் தொங்கிய தாய்..!

 

ஒரு வயதுக் குழந்தையைக் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு  தூக்கில் தொங்கிய தாய்..!

பிரபாகரன் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில் துர்கா குழந்தையைப் பார்த்துக் கொண்டு வீட்டிலேயே இருந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த பெரிய பாளையம் பகுதியில் வசித்து வரும் பிரபாகரன் (31)- துர்கா (28) தம்பதிக்கு ஒரு வயதில் ரித்திக் என்ற மகன் இருந்தார். பிரபாகரன் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில் துர்கா குழந்தையைப் பார்த்துக் கொண்டு வீட்டிலேயே இருந்துள்ளார். பிரபாகரனுக்கும் துர்காவுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்குமாம். அதனால் மனமுடைந்த துர்கா பிரபாகரன் வேலைக்குச் சென்ற நேரம் பார்த்து, தனது மகனைக் கொலை செய்து விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

ttn

மாலை 5 மணி வரையிலும் வீடு உள்பக்கம் பூட்டியிருந்ததால் சந்தேகமடைந்த வீட்டு உரிமையாளர் கதவைத் தட்டியுள்ளார். ஆனால், துர்கா வந்து திறக்காததால் வீட்டிலிருந்த ஓடு ஒன்றைத் தூக்கிவிட்டு வீட்டினுள் பார்த்துள்ளார். அப்போது, துர்கா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

 

ttn

உடனே அங்குச் சென்ற போலீசார், குழந்தையின் கழுத்தில் கைத்தடம் இருப்பதால் துர்கா தான் அவரை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று கண்டுபிடித்துள்ளனர். இரண்டு பேரின் உடலையும் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.