ஒரு மணி நேர சுகம்… இன்பத்திருமணம் என்ற பெயரில் நாசமாக்கப்படும் சிறுமிகள்!!

 

ஒரு மணி நேர சுகம்… இன்பத்திருமணம் என்ற பெயரில் நாசமாக்கப்படும் சிறுமிகள்!!

ஒரு மணிநேர சுகத்துக்காக 9 வயது முதல் 15 வயது உள்ள ஆதரவற்ற சிறுமிகளை ஈராக் நாட்டு ஆண்கள் இன்பத்திருமணம் என்ற பெயரில் நாசமாக்கியது அம்பலமாகியுள்ளது. 

ஒரு மணிநேர சுகத்துக்காக 9 வயது முதல் 15 வயது உள்ள ஆதரவற்ற சிறுமிகளை ஈராக் நாட்டு ஆண்கள் இன்பத்திருமணம் என்ற பெயரில் நாசமாக்கியது அம்பலமாகியுள்ளது. 

ஈராக்கில் மனைவியை பிரிந்திருக்கும் ஆண்கள் இன்பத் திருமணம் என்ற பெயரில் ஒரு மணி நேர சுகத்துக்காக சிறுமிகளை வரதட்சணை கொடுத்து திருமணம் செய்துகொள்ளும் கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கின் கர்பலா என்ற பகுதியில் தான் இந்த கொடூரங்கள் அரங்கேறிவருகின்றன. ஆதரவில்லாமல் இருக்கும் சிறுமிகளை ஒரு மணி நேரம் முதல் பல ஆண்டுகள் வரை குத்தகைக்கு எடுக்கும் ஆண்கள், சிறுமிகளை இன்பத்திருமணம் செய்கின்றனர். அதாவது திருமணம் செய்யாமல் ஒரு பெண்ணின் மேல் கைவைக்கக்கூடாது என அந்நாட்டு சட்டம் சொல்கிறது.எனவே கண் துடைப்புக்காகவே இந்த இன்ப திருமணம் நடக்கிறது.

Rape

இதற்கு பல மதகுருக்களே உடந்தையாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குடும்ப வறுமை மற்றும் பசியின் காரணமாக சிறுமிகளும் இத்தகைய சம்பவத்திற்கு சம்மதிப்பதாகவும், அந்த சிறுமிகள் புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அந்நாட்டு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.