ஒரு பதிவு வெளியிட இத்தனை கோடி வாங்குகிறீர்களா கோலி மற்றும் பிரியங்கா? 

 

ஒரு பதிவு வெளியிட இத்தனை கோடி வாங்குகிறீர்களா கோலி மற்றும் பிரியங்கா? 

இந்தியாவில் நாளுக்கு நாள் சமூக வலைத்தள வாசிகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் நாளுக்கு நாள் சமூக வலைத்தள வாசிகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதிலும்  இன்ஸ்டாகிராம் உபயோகிக்கும் நபர்களின் எணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பிரபலங்கள் பலரும் தங்களது ரசிகர்களுடன் அதில் உரையாடுவதால் தான். இந்த நிலையில் இந்திய நட்சத்திரங்களில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ஆகியோர் மட்டுமே இன்ஸ்டாகிராம் அதிக பின் தொடர்பவர்களை வைத்துள்ளதாக ஹோப்பர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

தற்போது அவர்கள் வெளியிடும் ஸ்பான்சர் போஸ்டிற்கு எத்தனை கோடி சம்பாதிக்கிறார்கள் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன் படி 38.2 மில்லியன் பின் தொடர்பவர்களை வைத்திருக்கும் கோலி, ஒரு போஸ்ட்டுக்கு ரூ.1.35 கோடி சம்பளமாக பெறுகிறார். அதே போல் 43.4 மில்லியன் பின் தொடர்பவர்களை வைத்திருக்கும் பிரியங்கா சோப்ரா, ஒரு போஸ்ட்டுக்கு ரூ.1.86 கோடி வாங்குகிறாராம்….

virat

மேலும் இதில் முதல் இடத்தில் போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், இரண்டாவது, மூன்றாவது இடத்தில் கால்பந்து வீரர்கள் நெய்மர் மற்றும் மெஸ்சி ஆகியோர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.