ஒரு நாள் கூட குடிக்காமல் இருந்ததில்லை; மனம் திறக்கும் ‘பம்பாய்’ ஹீரோயின்

 

ஒரு நாள் கூட குடிக்காமல் இருந்ததில்லை; மனம் திறக்கும் ‘பம்பாய்’ ஹீரோயின்

மதுவுக்கு அடிமையாக இருந்ததாக ’பம்பாய்’ நடிகை மனிஷா கொய்ராலா தனது சுயசரிதையில் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

மும்பை: மதுவுக்கு அடிமையாக இருந்ததாக ’பம்பாய்’ நடிகை மனிஷா கொய்ராலா தனது சுயசரிதையில் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகையான மனிஷா கொய்ராலா, மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, ‘இந்தியன்’, ‘முதல்வன்’, ‘பாபா’, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். பாலிவுட்டிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மனிஷா கொய்ராலா, சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். அமெரிக்கா சென்று கேன்சரை குணப்படித்திக் கொண்டு தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ‘ஹீல்டு: புது வாழ்வு கொடுத்த கேன்சர்’ எனும் தலைப்பில் சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார். இதனை பென்குயின் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

manishakoirala

அதில், ’தீராத குடிப்பழக்கத்தினால் தான் எனக்கு கேன்சர் ஏற்பட்டது. நண்பர்கள், முன்னாள் காதலர் என பலரும் எச்சரித்தும் என்னால், குடிப்பழக்கத்தில் இருந்து மீள முடியவில்லை. கேன்சரால் பாதிக்கப்பட்ட நாட்கள் அவ்வளவு கொடுமையானது என்றாலும், கேன்சர் என் வாழ்க்கையின் பரிசாகவே கருதுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

manishakoirala

மேலும், என் சிந்தனை கூர்மையானது, என் மனம் தெளிவானது, என் கண்ணோட்டம் மாறியதுமுன்பெல்லாம் அதிகம் கோபமாக, பதற்றமாகவே இருப்பேன். ஆனால் அதிலிருந்து மீண்டு, தற்போது முற்றிலும் அமைதியாக உள்ளேன் என தெரிவித்துள்ளார். கேன்சர் பாதிப்பில் இருந்தபோது தான் எதிர்க்கொண்ட சவால்கள் குறித்தும் அந்த புத்தகத்தில் மனிஷா கொய்ராலா பகிர்ந்துள்ளார்.