‘ஒரு நாள் ஒரு பொழுதாவதாவது எனக்கும் விடியும்’ : தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருக்கம்!

 

‘ஒரு நாள் ஒரு பொழுதாவதாவது எனக்கும் விடியும்’ : தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருக்கம்!

அடுத்த பொதுக்கூட்டத்தில் நான் 1 மணி நேரம் பேசுவேன். ஒரு நாள் ஒரு பொழுதாவதாவது எனக்கும் விடியும்.

திருப்பூர்:  ஒரு நாள் ஒரு பொழுதாவதாவது எனக்கும் விடியும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியது தொண்டர்கள் மத்தியில் உணர்ச்சி பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. 

vijayakanth

திருப்பூரில் தேமுதிக முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், விஜய் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜயகாந்த்,  அடுத்த பொதுக்கூட்டத்தில் நான் 1 மணி நேரம் பேசுவேன். ஒரு நாள் ஒரு பொழுதாவதாவது எனக்கும் விடியும். அப்பொழுது நான் உங்களைத் தங்கத் தொட்டிலில் வைத்துத் தாலாட்டுவேன்’ என்றார். விஜயகாந்த்தின் இந்த பேச்சு அவரது தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

vijayakanth

இதையடுத்து  பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தில் சில காலமாகக் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வெளிநாட்டு முதலீடுகள் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். வேலைவாய்ப்பு அதிகரித்தால் வழிப்பறி, திருட்டு குறையும்’ என்றார்.