ஒரு தடவை சொன்ன ரஜினி ! ஒருலட்சம் பேர் கண்டனம் !

 

ஒரு தடவை சொன்ன ரஜினி ! ஒருலட்சம் பேர் கண்டனம் !

குடியுரிமை சட்டத்தை ரஜினிகாந்த் எதிர்க்கிறாரா அல்லது ஆதரிக்கிறாரா, ரஜினியின் நிலைப்பாடு என்ன என்றும் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

குடியுரிமை மசோதாவை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், டிவிட்டரில் நடிகர் ரஜினிகாந்த் பதிவிட்ட கருத்து டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. 

ttn

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்த ரஜினியின் கருத்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களையும் விவாதங்களையும் உருவாக்கி உள்ளது. 
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அண்மையில் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததால் அமலுக்கு வந்துள்ளது. 

ttn

இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும், முக்கியமாக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 
போராட்டங்கள் வன்முறையாக மாறி தடியடி, வாகனங்கள் எரிப்பு, துப்பாக்கிச்சூடு என தீவிரம் அடைந்துள்ளது. மாணவர்கள் போராட்டத்தால் கல்வி நிறுவனங்கள் பல காலவரையரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்தால் இந்திய சிறுபான்மை மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசு சொல்லியும் போராட்டம் ஓயவில்லை. 
இதற்கிடையே போராட்டம் குறித்து நடிகர் ரஜினி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார். 

 

 “எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒருவழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இப்போது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என்றார். 

 

ttn

இதில் எந்த பிரச்சனைக்கும் தீர்வு வன்முறை ஒருவழி ஆகிவிடக் கூடாது என்ற கருத்து சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. குடியுரிமை சட்டத்தை ரஜினிகாந்த் எதிர்க்கிறாரா அல்லது ஆதரிக்கிறாரா, ரஜினியின் நிலைப்பாடு என்ன என்றும் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.இந்நிலையில் ரஜினிகாந்த்தின் இந்த டிவிட்டர் பதிவு டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.