ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

 

ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

இன்று காலை சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து, வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. 

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே வெப்பம் ஒரு காட்டம் காட்டி வருகிறது. இந்த வெப்பத்தையே மக்கள் தாங்க முடியாமல் இருக்கும் நிலையில், ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இருக்கும் வெப்பத்தை எப்படித் தாங்கப் போகிறோமோ என்று மக்கள் பெரும் கவலையுடன் இருந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் குமரி மாவட்டத்தின் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. ஆனால் குமரியைத் தவிரப் பிற மாவட்டங்களில் வெப்பம் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவே இருந்தது. இன்று காலை சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து, வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. 

ttn

இந்நிலையில், பல மாவட்டங்களில் அதிகரித்து வரும் வெப்பம் குறையும் என்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.