ஒரு குரல் மட்டுமே ஓங்கி ஒலிக்கக் கூடாது: வனிதாவை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன்!

 

ஒரு குரல் மட்டுமே ஓங்கி ஒலிக்கக் கூடாது: வனிதாவை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன்!

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் 3  நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் முதல் ஹவுஸ் மேட்ஸ் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைக்க நினைப்பவர் வனிதா. அவர் சொல்ல வருவதை மட்டுமே அனைவரும் கேட்க வேண்டும் என்றும் மற்றவர் கருத்தை கேட்காமல் சண்டை போடுவது என்று தொடர்ச்சியாகச் செய்து வருவதால் மக்கள் மத்தியில் வெறுப்பைச் சம்பாதித்து வருகிறார். 

மேலும் இவரின் பேச்சை தட்டி கேட்க ஏன் ஒருத்தர் கூட முன் வரவில்லை? என்று ரசிகர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ரசிகர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு அந்த வீட்டிலிருந்து அவரை கேள்வி கேட்க முதல் முறையாக தர்ஷன் முன் வந்துள்ளார். 

இந்த நிலையில் வார இறுதி என்பதால் கமல் ஹாசன் ஹவுஸ் மேட்ஸ் அனைவரிடமும் உரையாடுவார். தற்போது அதற்கான புரோமோ வெளியாகியுள்ளது. அதில், ‘வனிதா, அபிராமியோட உண்மையான கேரக்டர் இது தானா இல்ல இந்த வாரம் அவங்க மேல attention இருக்கணும்’னு பண்றாங்களா தெரியவில்லை’ என்று கூறுகிறார். 

இதை கேட்ட கமல், ‘ஒரு குரல் மட்டுமே ஓங்கி ஒலிக்க கூடாது,தான் பேசுற அளவுக்கு கேக்கவும் வேணும். என்று நெற்றியடி கொடுத்துள்ளார். ஆக…  இன்றைய தொடரில் ரசிகர்கள் விரும்பியது போல் கமல்ஹாசன் வனிதாவைக் கண்டிப்பாகச் சரமாரியாகக் கேள்வி கேட்பார் என்று எதிர்பாக்கப்டுகிறது.