ஒரு குத்துப் பாட்டில் நடனமாட இத்தனை கோடி சம்பளமா? வாய்பிளக்கும் நெட்டிசன்கள்

 

ஒரு குத்துப் பாட்டில் நடனமாட இத்தனை கோடி சம்பளமா? வாய்பிளக்கும் நெட்டிசன்கள்

சாஹோ படத்தில் கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு நடனம் ஆட இரண்டு கோடியை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெற்றதாகக் கூறப்படுகிறது.

ஒரு குத்துப் பாட்டில் நடனமாட இத்தனை கோடி சம்பளமா? வாய்பிளக்கும் நெட்டிசன்கள்

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம் சாஹோ. இதில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். இவர்களுடன் ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, ஈவ்லின் சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என  3 மொழிகளில் உருவாகிவரும் இந்த படத்தின் ரூ.300 கோடிக்கும் மேல் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியானது. ஹாலிவுட் ரேஞ்சில் வெளியான அந்த ட்ரைலரை காணும் பொது படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிற செய்துள்ளது. 

இந்த நிலையில் இந்த படத்திலிருந்து சமீபத்தில் பேட் பாய் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பாட்ஷா, நீடி மோகன் ஆகியோர் இணைந்து பாடியுள்ள இந்த பாட்டிற்குபடு கவர்ச்சியாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடனமாடியுள்ளார். அந்த ஒரு பாட்டிற்காக மட்டுமே அவர் இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் டாப் கதாநாயகிகள் ஒரு முழு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை இவர் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.