ஒரு இரவுக்கு 2 லட்சம் தருவதாக பிரபல நடிகைக்கு அழைப்பு: வைரலாகும் ஃபேஸ்புக் பதிவு

 

ஒரு இரவுக்கு 2 லட்சம் தருவதாக பிரபல நடிகைக்கு அழைப்பு: வைரலாகும் ஃபேஸ்புக் பதிவு

ஒருநாள் இரவு தங்குவதற்கு 2 லட்சம் ரூபாய் தருவதாக அழைப்பு விடுத்த நபரின் முகத்திரையை பிரபல நடிகை காயத்ரி அருண் அம்பலப்படுத்தியுள்ளார்.

திருவனந்தபுரம்: ஒருநாள் இரவு தங்குவதற்கு 2 லட்சம் ரூபாய் தருவதாக அழைப்பு விடுத்த நபரின் முகத்திரையை பிரபல நடிகை காயத்ரி அருண் அம்பலப்படுத்தியுள்ளார்.

கேரளா தொலைக்காட்சிகளின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காயத்ரி அருண். கேரளா சின்னத்திரை உலகில் ஏராளமான தொடர்களில் நடித்து வருகிறார்.

இவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு மெசேஜ் செய்த நபர் ஒருவர், ஒரு இரவு படுக்கையை பகிர்ந்துகொள்ள 2 லட்சம் ரூபாய் பணம் தருவதாகவும், இந்த விஷயம் நமக்குள் மட்டும் ரகசியமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த காயத்ரி, “உங்களது தாய் மற்றும் சகோதரி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நான் ஆண்டவனிடம் பிரார்த்திக்கும்போது கேட்டுக்கொள்கிறேன்” என அந்த நபருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அதோடு இன்றி, இந்த தகவலை தன் முகநூல் பக்கத்திலும் காயத்ரி அருண் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு சமூகவலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.