ஒரு ஆணுடன் ஒரு வருடம் மட்டுமே வாழ ஆசை: திருமணம் குறித்து ஸ்ரீரெட்டி ஷாக் பதிவு!

 

ஒரு ஆணுடன் ஒரு வருடம் மட்டுமே வாழ ஆசை: திருமணம் குறித்து ஸ்ரீரெட்டி ஷாக் பதிவு!

திருமணம் குறித்த நடிகை ஸ்ரீ ரெட்டியின் பேஸ்புக் பதிவு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சென்னை: திருமணம் குறித்த நடிகை ஸ்ரீ ரெட்டியின் பேஸ்புக் பதிவு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

திரைப்படத்தில் வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைக்கின்றனர் என தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது குற்றம் சுமத்தி சர்ச்சையைக் கிளப்பியவர் ஸ்ரீரெட்டி. ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், இயக்குநர் சுந்தர்.சி உள்ளிட்டோர் மீது பகிரங்கமாக பாலியல் குற்றம்சாட்டி தமிழ் திரையுலகில் அதிர்வலையை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் இவர் தற்போது தனது திருமணம் குறித்து ஒரு பதிவு போட்டு, மீண்டும் ஒரு புதிய  சர்ச்சையை கிளப்பியியுள்ளார். அதாவது தன்னால் ஒரு ஆணுடன் மட்டும் குடும்பம் நடத்த முடியாது என வெளிப்படையாக அறிவித்துள்ளார். 

அந்த பதிவில் அவர் கூறியதாவது, ‘என் பெற்றோரைத் தவிர வேறு யார் மீதும் என்னால் அன்பு செலுத்த முடியாது. எனக்கு ஒருவரை பிடித்திருந்தால், அவருடன் ஒரு வருடம் தான் டேட் செய்வேன். அதற்கு மேல் எனக்கு போரடித்துவிடும். அதனால் தான் எனக்கு திருமணம் பிடிக்காது. ஒவ்வொரு முறையும் எனக்கு புதிது புதிதாக காதல் வேண்டும். நான் ஒரு தனனா ப்ளேகேர்ள், டிராமா இல்லை, கமிட்மெண்ட் இல்லை, குழப்பம் இல்லை, உண்மையான பெண்’ என்று கூறியுள்ளார். 

sri reddy

இந்த பதிவை பார்த்த அதிர்ச்சியடைந்த சிலர், ‘உங்களுக்கு என்னாச்சு ஏன் இந்த திடீர் பதிவு? என்று கேள்வி எழுப்பினர். மற்றொரு பக்கம் அவருடைய ரசிகர்களுக்கு அவருக்கு புரோபோஸ் செய்தது மட்டுமின்றி, ஒரு வருடம் குடும்பம் நடத்த தயார் என்று பதிவு செய்துள்ளனர்.