ஒருவேளை சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்படுறேன்…மறைந்த பிரபல நடிகரின் மனைவி வேதனை!

 

ஒருவேளை சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்படுறேன்…மறைந்த பிரபல நடிகரின் மனைவி வேதனை!

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

மறைந்த நடிகர் ராஜசேகர் 80மற்றும் 90காலகட்டங்களில் பல படங்களில் நடித்ததின் மூலம்  மக்கள் மத்தியில் மிகவும் பரிட்சயமானவர்.  இதையடுத்து சின்னதிரை   தொடர்களிலும் நடித்து வந்தார். இவருக்கு தாரா என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை. சமீபத்தில் ராஜசேகர், உடல்நல குறைவால் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

rajasekar

 ராஜசேகர் ஒருநாளாவது  சொந்த வீட்டில் இருந்து வேண்டும் என்று நினைத்துள்ளார்.  இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே அவர் வடபழனியில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால்  பத்திர பதிவு போன்ற விஷயங்கள் தாமதம் ஆனதால் அவர் அந்த வீட்டில் குடியேறுவதற்கு முன்பே இறந்துள்ளார். இதனால் அவரின் உடல் மட்டுமே அந்த வீட்டில் இறுதியாக வைக்கப்பட்டுள்ளது.

raja

இந்நிலையில் கணவர் இறந்துவிட்ட நிலையில் தனிமையில் இருக்கும் அவரது மனைவி தாரா ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், குழந்தைகள் இல்லாவிட்டாலும் நான் அவருடன் சந்தோஷமா  இருந்தேன். நாலு காசு சேர்த்து வைக்கல. ஆனால் அதற்காக நான் அவரை திட்டியது கூட இல்லை. அன்பாக பார்த்துருப்பாரு.  இந்த வீட்டை பேங்க்கில் லோன் வாங்கி வாங்கினாரு. பாதிக்கு மேல் கட்டிவிட்டார். தற்போது அவர் இறந்துவிட்டதால்  பேங்கிலிருந்து எனக்கு காசு கட்ட போன் வருகிறது. 

tara

நான் அடுத்த வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறேன்.  கடந்த 15 நாட்களாக ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு வரேன். அவர் நடித்த சீரியல்களில் வாய்ப்பு கேட்டுருக்கிறேன். அது கிடைக்காவிட்டால் வீட்டுவேலைக்கு தான் போகணும். வெளியுலகம் தெரியாமல் 30 வருஷம் என்ன பார்த்துக்கிட்டாரு. இந்த வீட்டை விற்றுகடனை கட்டலாம்னு பார்த்தால் இது அவரோட கடைசி ஆசை. என்ன பன்னுறதுனே தெரியல’ என்றார்.