‘ஒருநாள் திருடலனா கூட எனக்கு தூக்கம் வராது சார்’…பலே திருடனின் பகீர் வாக்குமூலம்!

 

‘ஒருநாள் திருடலனா கூட எனக்கு தூக்கம் வராது சார்’…பலே திருடனின் பகீர் வாக்குமூலம்!

வெளியில் வந்த நாள்முதல் தினமும் வீடு புகுந்து கொள்ளையடித்து வருவதும் தெரியவந்தது.

சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் சந்தேகப்படும் வகையில் ஒருவர் சுற்றி திருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் ஓமலூரை சேர்ந்த அய்யந்துரை என்பது தெரியவந்தது. அய்யந்துரை கடந்த 40 நாட்களுக்கு முன்னர் கோவை மத்திய சிறையிலிருந்ததும். வெளியில் வந்த நாள்முதல் தினமும் வீடு புகுந்து கொள்ளையடித்து வருவதும் தெரியவந்தது.

ttn

இதை தொடர்ந்து அய்யந்துரை தொடர் விசாரணையில், பகல் முழுவதும் பேருந்திலேயே  பயணம் செய்து வரும் இவர் இரவில் ஏதாவது ஒரு வீட்டை நோட்டமிட்டுக் கொள்ளையடிப்பது வழக்கமாம். ஒருநாள் திருடவில்லை என்றால் கூட  தூக்கம் வராது என்று கூறி போலீசையே திக்குமுக்காட வைத்துள்ளான் இந்த பலே  திருடன். 

ttn

இதையடுத்து  அய்யந்துரையிடமிருந்து  6 இருசக்கர வாகனங்கள், பத்து சவரன் நகை, ஒரு முருகன் சிலை மற்றும் 70 ஆயிரம் ரூபாய்  பறிமுதல் செய்ததோடு, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.