ஒருத்தன் கத்தியை காமிச்சான் -இன்னொருத்தன் துப்பாக்கியை காமிச்சான் -இன்ஸ்பெக்டர் மனைவிக்கே நடந்த கொடுமை .

 

ஒருத்தன் கத்தியை காமிச்சான் -இன்னொருத்தன் துப்பாக்கியை காமிச்சான் -இன்ஸ்பெக்டர் மனைவிக்கே  நடந்த கொடுமை .

தனியே வந்த ஒரு இன்ஸ்பெக்டரின் மனைவியிடம் துப்பாக்கியை காமித்து பணத்தை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்

ஒருத்தன் கத்தியை காமிச்சான் -இன்னொருத்தன் துப்பாக்கியை காமிச்சான் -இன்ஸ்பெக்டர் மனைவிக்கே  நடந்த கொடுமை .

உத்திரப்பிரதேச மாநிலம் நவுச்சண்டி பகுதியில் வீர்பால் சிங் என்பவர் தன்னுடைய மனைவி சோனம் ராணியுடன் வசிக்கிறார் .இந்த வீர்பால் சிங் உ.பி. போலீசில் துணை ஆய்வாளராக உள்ளார், அவர் தற்போது எட்டா மாவட்டத்தில் உள்ள பாக்வாலா காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.இந்த இன்ஸ்பெக்டரின் மனைவி அவரை தினமும் காவல் நிலையத்தில் சந்தித்து விட்டு வருவது வழக்கம் .

இதற்கிடையே சோனம் தன்னுடைய கணவரை கடந்த வாரம் மீரட்டில் உள்ள சோஹ்ராப் கேட் பஸ் ஸ்டாண்டில்  பார்த்து பேசிவிட்டு அவரிடமிருந்த பணத்தை வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார் .பிறகு அவர் ஒரு ஆட்டோவில் போக ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறினார் . .அப்போது அந்த ஆட்டோவில் ஏற்கனவே புர்கா அணிந்திருந்த இருஆண்கள் இருந்தார்கள் ,அவர்களை பெண்கள் என்று நினைத்து அந்த சோனம் அவர்களின் அருகில் அமர்ந்தார் .பிறகு அந்த ஆட்டோ சிறிது தூரம் சென்றதும் அந்த புர்கா அணிந்திருந்த இருவரில் ஒருவன் துப்பாக்கியை எடுத்து அந்த சோனமின் தலையில்  வைத்தான் .இன்னொரு புர்கா அணிந்திருந்தவன் கத்தியை எடுத்து அவரின் கழுத்தில் வைத்தான்  .அதனால் அந்த பெண் பயந்துகொண்டே இருந்தார் .பின்னர் அவர்கள் அந்த பெண்ணிடமிருந்து கைப்பையை பிடுங்கி கொண்டு ஹப்பூர் பகுதியில் இறக்கி விட்டு விட்டு ஆட்டோவில் ஓடி  விட்டார்கள் .. அந்த பையில் ரூ .25,600 ரொக்கம் மற்றும் தங்க நகைகள் இருந்தன.அதன் பிறகு  சோனம் தன்னுடைய கணவருக்கு போன் செய்து இந்த கொள்ளை விஷயத்தை கூறினார் .பின்னர், அந்த பெண் நவுச்சண்டி காவல் நிலையத்தை அடைந்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிந்து அந்த கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

ஒருத்தன் கத்தியை காமிச்சான் -இன்னொருத்தன் துப்பாக்கியை காமிச்சான் -இன்ஸ்பெக்டர் மனைவிக்கே  நடந்த கொடுமை .