ஒருதலைக்காதலால் வலுக்கட்டாயமாக செல்பி எடுத்த இளைஞர்…தீக்குளித்து இறந்த கல்லூரி மாணவி!

 

ஒருதலைக்காதலால் வலுக்கட்டாயமாக செல்பி எடுத்த இளைஞர்…தீக்குளித்து இறந்த கல்லூரி மாணவி!

மோனிஷா கல்லூரிக்கு செல்லும்  போது  தன்னை காதலிக்குமாறு கூறி வற்புறுத்தி வந்துள்ளார்

செங்கல்பட்டு மாவட்டம்  மாமல்லபுரம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் மோனிஷா. மோனிஷாவின் பெற்றோர் இறந்துவிட்டதால் அவர் தாய் மாமன் சரவணன் வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வந்துள்ளார்.  இவரை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இதனால் மோனிஷா கல்லூரிக்கு செல்லும்  போது  தன்னை காதலிக்குமாறு கூறி வற்புறுத்தி வந்துள்ளார். இருப்பினும் மோனிஷா அவரின் காதலை ஏற்கவில்லையாம். 

ttn

இந்நிலையில் மோனிஷாவை அந்த இளைஞர் வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்துள்ளார். மோனிஷா கத்தி கூச்சலிட்ட பிறகும் அவருடன் ஒன்றாக இருப்பது போல செல்பி எடுத்துள்ளார் அந்த இளைஞர். மேலும் நீ  காதலிக்காவிட்டால் இந்த  புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு விடுவேன் என மோனிஷாவை மிரட்டி இருக்கிறார். இதனால் மனமுடைந்து போன மோனிஷா தனக்கு நேர்ந்த காதல் தோல்வி குறித்து கடிதம் எழுதி வைத்துவிட்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ttn

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மாமல்லபுரம் போலீசார் மோனிஷா தற்கொலைக்குக் காரணமான அந்த இளைஞரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.