ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆயிரங்கால் மண்டபம் கட்டப்படும்: நடிகை ரோஜா அதிரடி!

 

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆயிரங்கால் மண்டபம் கட்டப்படும்: நடிகை ரோஜா அதிரடி!

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன்  இடிக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் மீண்டும் கட்டப்படும் என்று நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா உறுதியளித்துள்ளார்.

திருப்பதி: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன்  இடிக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் மீண்டும் கட்டப்படும் என்று நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா உறுதியளித்துள்ளார்.

roja

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை ரோஜா,  ‘சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து  வருகிறது. ஆனால் சந்திரபாபு நாயுடுவோ, மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி வருகிறார். இது உயிரிழந்த ராணுவ வீரர்களை அவமானப்படுத்தும் செயல். கோதாவரி புஷ்கரத்தின் போது சந்திரபாபு நாயுடு தனது விளம்பரத்திற்காக நடத்திய படப்பிடிப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் பலியானார்கள். அப்போது சந்திரபாபு நாயுடு ஏன் ராஜினாமா செய்யவில்லை. அவர் மீது எதற்காக வழக்குப் பதிவு செய்யவில்லை’ என்று கேள்வி எழுப்பினார்.

 

tirupati

தொடர்ந்து பேசிய நடிகை ரோஜா, ‘ஆயிரங்கால் மண்டபத்தில் வெங்கடேஸ்வர சுவாமி பக்தர்களுக்கு ஆசீர்வதிப்பதாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.அப்படிப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தை சந்திரபாபு நாயுடு தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி இடித்து தரைமட்டமாக்கினார். ஆயிரங்கால் மண்டபம் இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் கட்டுவதற்காக அமராவதி ஜகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அதே இடத்தில் மீண்டும்  ஆயிரங்கால் மண்டபம் கட்டப்படும்’ என்றார்.