‘ஒன்றிணைவோம் வா’ இயக்கம் தொடங்கி 5 நாட்களில் 2 லட்சம் பேர் உதவி கேட்டுள்ளனர்: மு.க ஸ்டாலின் ட்வீட்!

 

‘ஒன்றிணைவோம் வா’ இயக்கம் தொடங்கி 5 நாட்களில் 2 லட்சம் பேர் உதவி கேட்டுள்ளனர்: மு.க ஸ்டாலின் ட்வீட்!

திமுக சார்பில் “ஒன்றிணைவோம் வா” என்னும் இயக்கம் தொடரப்பட்டு, தொடர்பு எண்ணும் வழங்கப்பட்டது.

கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் வருமானமில்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தெருவோரம் வசித்து வருபவர்கள் உணவில்லாமல் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் தன்னார்வலர்கள் உணவு கொடுத்து வருகின்றனர். அதே போல அரசும் உணவுக் கூடங்கள் அமைத்து, ஏழை மக்களுக்கு உணவு வழங்கி வருகிறது. அந்த வகையில், அரசியல் கட்சிகளும் சினிமா பிரபலங்களும் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மக்களுக்கு உதவி வருகின்றனர். 

ttn

மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி செய்யும் பொருட்டு திமுக சார்பில் “ஒன்றிணைவோம் வா” என்னும் இயக்கம் தொடரப்பட்டு, தொடர்பு எண்ணும் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த இயக்கம் தொடங்கி 5 நாட்களில் 2 லட்சம் பேர் உதவிகோரியுள்ளதாக மு.க ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ” #OndrinaivomVaa உதவி எண் (90730 90730) தொடங்கப்பட்ட 5 நாட்களில் இதுவரையிலும் சுமார் 2 லட்சம் பேர் உதவி கோரியுள்ளனர். இலட்சக்கணக்கானோர் சிரமப்படுவதையே இது காட்டுகிறது. அவர்களுக்கு திமுக அரணாக நிற்கும். பேரிடரிலும் களத்தில் நிற்கும் உடன்பிறப்புகளுக்கு பாராட்டுகளும் நன்றியும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.