ஒடிசாவில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு பெங்களூரில் குழந்தை பிறந்தது

 

ஒடிசாவில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு பெங்களூரில் குழந்தை பிறந்தது

2019-ம்  தொடக்கத்தில்  ஒடிசாவில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். படிப்பை தொடர முடியாத அந்த சிறுமி அந்த சம்பவத்திற்கு பிறகு போன வருடம் ஆகஸ்ட் மாதம் பெங்களூரில் தனது உறவினர் வீட்டிற்கு குடிவந்துள்ளார். உறவினர்கள் தாங்கள் வீட்டுவேலை செய்யும் இடத்தில் இந்த சிறுமிக்கும் வேலை வாங்கி கொடுத்துள்ளனர்.

 

2019-ம் ஆண்டு தொடக்கத்தில்  ஒடிசாவில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். படிப்பை தொடர முடியாத அந்த சிறுமி அந்த சம்பவத்திற்கு பிறகு போன வருடம் ஆகஸ்ட் மாதம் பெங்களூரில் தனது உறவினர் வீட்டிற்கு குடிவந்துள்ளார். உறவினர்கள் தாங்கள் வீட்டுவேலை செய்யும் இடத்தில் இந்த சிறுமிக்கும் வேலை வாங்கி கொடுத்துள்ளனர்.

rep img

சிறுமி வேலை செய்யும் இடத்தில் வயிறு பெரிதாக இருப்பது குறித்து கேட்டதற்கு அதிகமாக சாப்பிட ஆரம்பித்ததால் தான் வயிறு பெரிதாகியிருப்பதாக கூறியுள்ளார். ஒருநாள் வீட்டை துடைத்துக்கொண்டிருக்கும் போது ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. அந்த இடத்திலேயே யாருடைய உதவியும் இன்றி குழந்தை பிறந்துள்ளது. பின் தாயும் சேயும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த என்ஜிஓ ஒன்று போலீசுக்கு தெரியப்படுத்தியுள்ளது. பின் ஒடிசா போலீஸ் போக்ஸோவில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் சிறுமியை வேலைக்கு வைத்ததற்காக வீட்டின் உரிமையாளர் மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.