ஒடிசாவில் அவலநிலை: உதவிக்கு வராததால் மகள் சடலத்தை தோளில் தூக்கி சென்ற தந்தை!

 

ஒடிசாவில் அவலநிலை: உதவிக்கு வராததால் மகள் சடலத்தை தோளில்  தூக்கி சென்ற தந்தை!

இறந்துபோன மகளின் உடலை தந்தை ஒருவர் 10 கிலோ மீட்டர் தூரம் தோளில் தூக்கிச் சென்ற அவலம் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

ஒடிசா : இறந்துபோன மகளின் உடலை தந்தை ஒருவர் 10 கிலோ மீட்டர் தூரம் தோளில் தூக்கிச் சென்ற அவலம் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகுந்த் தோரா. தித்லி புயலால் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தில் முகுந்தின் மகள் அடித்துச் செல்லப்பட்டார். 7 நாட்களுக்குப் பிறகு தனது வீட்டிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் இறந்த நிலையில் இருந்த மகளின் உடலை கண்டெடுத்தார் முகுந்த்.
 
இதையடுத்து மகளின் உடலை கொண்டு செல்ல முகுந்திற்கு யாரும் உதவிக்கு  வராத நிலையில், பிளாஸ்டிக் கவரில் மகளின் சடலத்தை சுற்றிய முகுந்த் அதை தனது தோளில் சுமந்து 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.