ஐ.பி.எல் போட்டிகள் எப்போது… எங்கே? அறிவிப்பு வெளியீடு

 

ஐ.பி.எல் போட்டிகள் எப்போது… எங்கே? அறிவிப்பு வெளியீடு

இந்தியாவின் கோடை விடுமுறையின் மாபெரும் கொண்டாட்டமாக சில ஆண்டுகளாக மாறிவிட்டது ஐ.பி.எல் போட்டிகள். நீண்ட நேரம் நடக்கும் கிரிக்கெட் போட்டிகள் சோர்வளிக்கும் காலத்தில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் உருவாக்கப்பட்டன. அதை இன்னும் கேளிக்கையுடன் பார்க்கும் வகையில் உருவானதே ஐ.பி.எல்.

ஐ.பி.எல் போட்டிகள் எப்போது… எங்கே? அறிவிப்பு வெளியீடு

சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரூ, ஹைதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகியவற்றை பிரதிநிதிப்படுத்தும் அணிகளை உருவாக்கி உள்ளூர் ரசிகர்களையும் ஈர்த்தது ஐபிஎல் நிர்வாகம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி இருந்து வருகிறார். மேலும் போட்டியின் இடைவெளிகளிலும் ரசிகர்களுக்கான கேளிக்கைகளும் ஏற்பாடு செய்யப்படிருந்தன. சுருக்கமாகச் சொன்னால், நான்கு மணி நேரத்திற்கான திரைப்படம் பார்க்கும் விதமாக வடிவமைக்கப்பட்டது.

ஐ.பி.எல் போட்டிகள் எப்போது… எங்கே? அறிவிப்பு வெளியீடு

இந்த ஆண்டு திட்டமிட்டப்படி, ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் நடைபெற்றிருக்க வேண்டியது. ஆனால், கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக போட்டிகள் நடத்தப்பட வில்லை. ஆயினும், ரசிகர்களை அனுப்பாமல் வீரர்கள் மட்டும் ஆடும் போட்டிகள் நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அரசு அனுமதியளிக்க வில்லை.

இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்றும், போட்டிக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று ஐபிஎல் நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் அறிவித்துள்ளார்.