ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மீண்டும் காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப துடியாய் துடிக்கும் சீனா…. பதிலடி கொடுக்க காய்களை நகர்த்த தொடங்கிய இந்தியா…..

 

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மீண்டும் காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப துடியாய் துடிக்கும் சீனா…. பதிலடி கொடுக்க காய்களை நகர்த்த தொடங்கிய இந்தியா…..

ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் மீண்டும் காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவற்கு சீனா முயற்சி எடுத்து வருகிறது. அதேசமயம் அதற்கு பதிலடி கொடுக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு ஏற்கனவே எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலத்துக்கு அதுவரை சிறப்பு அந்தஸ்து கொடுத்து வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370யை மத்திய அரசு அதிரடியாக நீக்கியது. மேலும், அந்த மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னதாக அங்கு முன்னாள் முதல்வர்கள், பிரிவினைவாதிகள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை அதிரடியாக கைது செய்து காவலில் வைத்தது.

காஷ்மீரில் பாதுகாப்பு பணியில்  வீரர்கள்

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு, செல்போன் மற்றும் இன்டர்நெட் உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள மேற்கொண்டது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியது பாகிஸ்தான் எரிச்சலை ஏற்படுத்தியது. மேலும் இந்தியாவுடான வர்த்தக உறவை அந்நாடு துண்டித்தது. இதுதவிர, ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகளில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியது. சீனா மற்றும் ஒரு சில நாடுகளை தவிர வேறு எந்தநாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 16ம் தேதியன்று ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப சீனா முயன்றது. ஆனால், அது குறித்து பொது விவாதம் நடத்த மற்றும் ஒரு பொது அறிக்கை  விடுவதற்கு கூட  நமது நட்பு நாடுகள் மறுப்பு தெரிவித்தன. இதனால் சீனாவின் மூக்கு அறுப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் இன்று காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப சீனா தீவிரமாக முயன்று வருகிறது. இதனையடுத்து காஷ்மீர் விவகாரம் தொடர்பான தனது நிலைப்பாட்டை நம் நாடு பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள மற்ற உறுப்பு நாடுகளிடம் தெரிவிக்கும். இதுதவிர இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே நமது கூட்டாளிகள் மற்றும் கூட்டணி நாடுகளுடன் இராஜதந்திர அணுகுமுறையை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் தோவல்

இந்தியா-சீனா இடையிலான எல்லை விவகாரம் தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் ஒய் இந்த வாரம் நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேச உள்ளார். இந்த சூழ்நிலையில், சீனா காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.