ஐ.டி பெண்ணுக்கு கத்திக்குத்து: பேச மறுத்தால் இளைஞர் வெறிச்செயல்!
காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் காவ்யா . இவர் சென்னையிலுள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காவ்யா தனது வீட்டின் அருகே இளைஞர் ஒருவருடன் நின்று பேசிக்கொண்டு இருந்தார். திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த அந்த இளைஞர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் காவ்யாவை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதனால் நிலைகுலைந்த காவ்யா ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள், காவ்யாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, அந்த இளைஞரை மடக்கி பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அது காவ்யாவின் காதலன் கெவின் என்பது தெரியவந்துள்ளது. ‘காவ்யாவும் தானும் கல்லூரியில் காதலித்து வந்ததாகவும், சமீபகாலமாக அவர் தன்னிடம் பேசுவதைத் தவிர்த்து வந்தார். அதனால் அது குறித்துப் பேசுவதற்காகச் சென்றேன். அப்போது ஏற்பட்ட தகராறில் கோபத்தில் கத்தியால் குத்தினேன்’ என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் தொடர் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், காவ்யாவின் சிகிச்சைக்கு பிறகே உண்மை வெளிவரும் என்று கூறியுள்ளனர்.
இதையும் வாசிக்க: ஸ்ரீதேவி மகனை மணக்கும் 45 வயது பாலிவுட் நடிகை!? என்ன சொல்கிறார் மலைக்கா